Friday, August 11, 2017

சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க !

இறக்கை பறப்பதற்கே; தவழ்வதற்கு அல்ல என்ற அப்துல் கலாம் ஐயா அவர்களின் பொன்மொழியை சொல்லி தலைப்பினுக்கு பெருமை சேர்த்தே தொடங்குகிறேன் !
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க
எங்கோ ஆகாய வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளை கண்டு நமக்கும் சிறகுகள் இல்லையே என்று ஆதங்கப்படுபவர்கள்தான் நாம் அனைவருமே ! இவ்வாறு பறவைகள் வானளவு பறப்பதற்கு அதன் சிறகுகள் மட்டுமே காரணம் என்று நாம் நினைத்தால் அது சற்றே தவறுதான் ! ஆம் . பறவைகள் அதன் மீதும் அதன் சிறகின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையினால் மட்டுமே உந்தப்பட்டு உயர உயர செல்கின்றன ! சிறகுள்ள பறவைகள் அனைத்தும் நினைத்த உயரத்தை அடைய முடிவது இல்லை ! தன் சிறகின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பறவைகள் மட்டுமே உயர உயர பறந்து நினைத்த உயரத்தை அடைகின்றன ! இதனை நம் வாழ்க்கையுடன் எளிதாக பொருத்தி பார்க்க இயலும் ! சிறகுகளை நல்ல பண்புகளின் அடையாளமாக கருதும் ஒவ்வொரு மனிதனும் எட்டாத உயரத்தை எளிதாக எட்ட முடியும் என்பதே இத்தலைப்பு கொண்டுள்ள மறைமுக விளக்கம் !
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க
உழைப்பு, உண்மை, உதவி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, விவேகம் உள்ளிட்ட அனைத்து சிறந்த பண்புகளுமே மனிதனின் சிறகுகளை வலுவாக்கி அவர்களது இலக்கை நோக்கி பறக்க பயணிக்க உதவுகிறது ! வெற்றி எனும் வசந்த வெளியில் வட்டமிட்டு பறந்திடவே வேண்டும் நமக்கு மேற்கூறிய சிறந்த பண்புச் சிறகுகள் ! சிறகு கொண்ட பறவையிடம் முயற்சி கிடையாது எனில் உயரம் அடையாது. அது போலவே மனிதன் தன் திறமைகளை தன்னுள் மட்டும் வைத்துக்கொண்டு வெளிப்படுத்தாவிடில் வெற்றி கிடையாது ! இவ்வெற்றியினை அடைவதற்கு பல தடைகள் வரலாம் . பல அவமானங்கள் வரலாம் . இந்த தடைகளையும் அவமானங்களையும் கண்டு துவண்டுபோய் சிறகொடிந்த பறவையாக இல்லாமல் துளிர்த்து எழுந்தால் வெற்றி வானில் பறந்து கொண்டே இருக்கலாம் !
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் ! இந்த பழமொழியை நான் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன் ! பறந்து விரிந்த வானம் பருந்துகளுக்கு மட்டுமல்ல சின்னஞ்சிறு குருவிகளுக்கும்தான் ! மேனியில் முளைத்த சிறகுகள் முடங்கி விட கூடாது என்பதற்காக யார் வேண்டுமானாலும் பறக்கலாம் . அது பருந்தாக இருந்தால் என்ன ? சின்ன குருவியாக இருந்தால் என்ன ? முயற்சி ஒன்றுதான் ! இதனை மனித குலத்திற்கும் அடிப்படையாக வைத்து கொள்ளலாம் ! மனிதரில் எவ்வகையிலும் ஏற்ற தாழ்வுகள் கிடையாது. முயற்சி செய்வோர் முன்னர் வருவார் அவருக்கே உலகம் சொந்தம் !

Monday, August 7, 2017

வேலையில்லா பட்டதாரி


UNEMPLOYED GRADUATE

மழையில்லா காலத்தில் 
மரத்தின் நிழலில் 
தப்பிப் பிழைத்து வாழும் 
சிறு செடியைப் போல் 
நான் எனது வீட்டில் 
------- வேலையில்லா பட்டதாரி