Friday, July 27, 2018

உறைந்து போன ஆசை

Frozen Desire
                   💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛

உறைந்து போன ஆசை !!


ஆசைப்பட்ட பொம்மை
ஆளுக்கொன்னு அப்பா வாங்கி தர
அடங்காத மனசு வந்து
அவனோட பொம்மைதான் வேணும்னு
அம்மாவிடம் அடம்பிடிக்க
நீயே இத வச்சுக்க
எனக்கு ஒன்னும் வேண்டாம்
என முகம் திருப்பி செல்லும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால் ........
உறைந்து போன ஆசை !!

வாயை புடுங்கி வசனம் பேசி
வாதம் செஞ்சு வம்புக்கு இழுத்து
அடிச்சு வச்சு ஆட்டம் போட்டு
அம்மாகிட்ட மாட்டி ஆயிரத்தெட்டு திட்டு வாங்கி
அப்பாகிட்ட அடிவாங்கி அங்கங்கே தழும்பாகி
விம்மி விம்மி நான் அழும்போது
பம்மி பம்மி என் பக்கம் வந்து
நீ என்ன அடிச்சதுக்கும்
அப்பா உன்ன அடிச்சதுக்கும்
சரியாய் போச்சு வாடா விளையாடலாம்
நீயே சொல்லு என்ன விளையாட்டுன்னு
என கம்மிய குரலில் காதில் கிசுகிசுக்கும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதிரியோ
எனக்கும் இருந்திருந்தால் ........
உறைந்து போன ஆசை !!

பள்ளிக்கூட பருவத்துல
பரிச்சையும் வரும்போது
பக்கத்துல உட்கார்ந்து
பக்குவமா எனக்கு சொல்லிகுடுத்து
பிறகு பாதிக்கு பாதி கூட இல்லாத
பெற்ற பயனில்லாத மதிப்பெண்ணை
பரிட்சை அட்டையில பார்த்துவிட்டு
பாரபட்சமே பார்க்காமல்
பரிசாக பக்கத்து வீட்டு பையன
பாராட்டி ஒப்பிட்டு
பல மடங்கு வீட்டில் பற்றவைத்து
பெற்றோர் என்னை கடிந்து கொள்ளும்போது
பாசாங்கு பண்ணாம
படிக்கிறப்ப ஒழுங்கா படிச்சாத்தான ஆகும்
புத்தகத்தை எடுத்திட்டு வா படிக்கலாம் என
அதிகார தொனியில் ஆறுதல் கூற
ஒரே ஒரு சகோதரனோ  சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்......
உறைந்து போன ஆசை !!

தனித்திருக்க விடாமல்
தன்னுள் இருக்கும் தனித்திறமையை
கண்டறிய ஓயாமல் என்னை உந்தித்தள்ளி
பிடித்த துறையில் பற்று கொண்ட பின்
திறம்பட என்னை மேம்படுத்த
பெற்றோரிடம் அதற்கு பரிந்துரைத்து
மற்றோரிடம் மெய்மறந்து என்னை பாராட்டி
துவண்ட பொழுதெல்லாம் தூக்கிவிட்டு
தூற்றுவோரை தூரம் தள்ளிவைத்து
ஏமாறும் பொழுதெல்லாம் ஆசுவாசப்படுத்தி
ஏற்றம் காண வழிவகுத்து
வெற்றியின் பக்கத்தை நானும் பார்க்கும் நொடி
களிப்பில் கண்கலங்கி என்னை கட்டியணைக்கவும்
இல்லை தோல்வியெனில்
விடுடா அடுத்த தடவ பார்த்துக்கலாம்
என அதே பாசத்துடன் கட்டியணைக்கவும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்......
உறைந்து போன ஆசை 

பருவ வயசுல பாதையை மாற்றி
வேகத்தை கூட்டி விவேகத்தை குறைக்கும்
வீண் வாய்ப்புகளின் விளிம்பில் நான் நிற்க
ஹார்மோன் மாற்றத்தால் கவனத்தை சிதறடிக்க
உடலிலும் உள்ளத்திலும் மாற்றத்தை தந்து
காலம் அதனது சூழ்நிலையை அமைக்கும்போது
என்மீது தொற்றிக்கொண்டு என்னுடன் உறவாட
அடம்பிடித்தலும் அஜாக்கிரதையும்
யோசனையின்மையும் நொடிப்பைத்தியக்காரத்தனமும்
முன் வந்து முன் வந்து குத்தாட்டம் போட
மதி மயங்கி நானும் விழும் வேளையிலே
கண்மூடி கண்டிக்கும் பெற்றோர் சாயலுமின்றி
செவிசாய்த்து உடனிருக்கும் நண்பனின் சாயலுமின்றி
உள்ளபடியே கண்டித்து நல்லபடியே தெளிவுரைக்கும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்........
உறைந்து போன ஆசை !!

கையோடு கை கோர்த்து நடந்து
கட்டியணைத்து உறங்கி பின்
தோள் மேல் தோள் போட்டு
கிடுகிடுன்னு வளர்ந்த பின்
கல்யாண வயசு வந்திடுச்சு
இன்னுமா சண்ட போடறீங்க
என எவரேனும் எதார்த்தமா சொல்ல
பதார்த்தமா வீட்டில பொருத்தம் பார்க்க
சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு போ
அப்பத்தான் எனக்கு நிம்மதி - என
கேலி பேசி என்னை வெறுப்பேத்தியே வர
திருமண நாளும் ஒருநாள் வர
மணமேடையில் மஞ்சள் கயிறை கட்டும்போது
கசிந்தே பழக்கப்படாத தன் கண்களின் ஓரத்தில்
கண்ணீர் சிந்தி யாரும் பார்க்கும் முன் துடைக்கும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்......
உறைந்து போன ஆசை !!

இந்நாளும் எந்நாளும் 
சுகமோ துக்கமோ
நன்மையோ தீமையோ
ஏற்றமோ இறக்கமோ
எது நடப்பினும்
மனங்களை பகிர்ந்துகொண்டு
அனுதினமும் என்னை நினைந்திருக்க
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்.....
உறைந்து போன ஆசை !!

                    💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛

[இக்கவிதையை பற்றிய உங்களது மேலான கருத்துகளை கீழ் உள்ள Comment-இல் கொடுக்கவும்]

Monday, July 16, 2018

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும். 


இதற்கு முன்னால் சென்ற சென்னிமலை மலையேற்றம் ஒரு சிறந்த அனுபவத்தை எனக்கு கொடுத்து இருந்தாலும் பாதை தார் பாதையாக இருந்ததால் பயணம் எளிதாக இருந்தது. மழையும் பெய்து வெயிலில் இருந்து காத்தது. அதற்கு எதிர்மாறாக இம்முறை கரடுமுரடான பாதையையும் ஏறு வெயிலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. செங்குத்தாக இருந்த மலைப்பாதையும் எங்கள் பயணத்தை கடினமாக்கியது. மலையேற்றத்தின் கடினமான பக்கத்தை மாணவர்களுக்கும் எங்களுக்கும்  காட்டிய பயணமாக இது அமைந்தது. 

மலையேறும் வழியில் அப்பகுதிவாழ் மக்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு அமையப்பெற்றது. 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் நடக்க சிரமப்பட்டு அவ்வப்போது ஓய்வெடுத்து மலையேற வயதான பூர்விக மக்களோ தலையில் விறகையும் கையில் மற்ற பண்டங்களையும் தாங்கி கொண்டு எளிதாக ஏறினர். மற்றவர்கள் இதனை வியப்புடன் பார்க்க  என் மனதில் சட்டென்று ஓடிய யோசனை என்னவென்றால் இப்படி மலை ஏறியும் இறங்கியும் தினமும் நடந்தால் மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ காப்பீடு போன்றவை எல்லாம் நகர வாழ் மக்களுக்கு எதற்காக தேவைப்பட போகிறது என்றுதான். 

பசுமை வெளியினுக்கோ அல்லது நாம் இதுவரை கண்டிராத பகுதிக்கோ செல்லும்போது அதனை ஒவ்வொரு அணுவாக ரசிக்காமல் தனியாகவும் குழுவாகவும் நின்று விதம் விதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதை மட்டும் குறியாக கொண்டிருக்கும் பழக்கம் அனைவரிடத்திலும் தொற்றி கொண்டிருப்பதை ஒவ்வொரு முறையும் காண நேரிடும் பொழுது கோபத்தை விட பரிதாபப்படத்தான் வேண்டியிருக்கிறது. மனதை வளமாக வைத்துக்கொள்ளும் பணியில் நவீன சாதனங்கள் உதவாது என்பதையும் இயற்கையும் அதனை புரிதலும் மட்டுமே மனதை பசுமையாக வைத்திருக்கும் என்பதையும் இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்வது நலம். 

மலையேற்றம் செல்லும்போது அனைவருக்கும் மதிய உணவை எடுத்து சென்று மலையேற்றம் முடிந்து கல்லூரி பேருந்துக்கு திரும்பும் மாணவர்களுக்கு பரிமாறுவது வழக்கம்.  அதுபோலத்தான் இம்முறையும் தக்காளி சாதத்தை எடுத்து சென்றோம். இம்முறை மலையேற்றம் சற்று கடினமாக இருந்ததால், பயணம் முடிந்து பேருந்துக்கு திரும்பிய மாணவர்கள் சாதாரண சுவையுடன் இருந்த தக்காளி சாதத்தை மிகவும் அனுபவித்து உண்ட பொழுது வெளிப்பட்டது கடின உழைப்பின் மதிப்பும் மகத்துவமும். 

தனிப்பட்ட முறையில், இப்பயணத்தில் இளநிலை மாணவர்களை திறம்பட வழிநடத்தியத்தின் மூலம் தலைமை பண்புக்கான பொருள் என்ன என்பதை நானும் என் நண்பர்களும் உணர்ந்து கொண்டோம். 

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Pleasant Trekking : Sitheswaran Temple

Pleasant Trekking : Sitheswaran Temple

மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை

Sunday, July 15, 2018

மகிழ்வான மலையேற்றம் 1 : சென்னிமலை


பல சமயங்களில் படிப்பறிவை விட அனுபவ அறிவே வெற்றிக்கு வழி காண்பதில் முன் நின்று கைகொடுக்கும். இத்தகைய அனுபவ அறிவினை மலையேற்றம் மூலமாக ஓரளவு என்னால் பெற முடிந்தது. பெற்ற என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

மலையேற்றம் என்பது மலையின் மீது ஏறுதலோ அல்லது நடப்பதோ மட்டும் அல்ல. இவைகளை தாண்டி பல விடயங்களை மலையேற்றத்தின் வாயிலாக நாம் கூர்ந்து கவனிக்கவும் கற்றுக் கொள்ளவும் வேண்டியுள்ளது. 

மலையேற்றம் பலருக்கு ஒரு நோக்கமாக இருக்கலாம்.

மலையேற்றம் பலருக்கு தங்களது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமையலாம். 

மலையேற்றம் பலருக்கு குறிக்கோளாக அமையலாம். 

மலையேற்றத்தை பலர் இலக்காக நிர்ணயிக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு சவாலாக இருக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு சிறந்த உடற்பயிற்சி நேரமாக இருக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு கொண்டாடும் நிகழ்வாக அமையலாம். 

மலையேற்றம் பலருக்கு புது நண்பர்களை கண்டறியும் இடமாக இருக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு ஒரு சிறந்த பயணமாக இருக்கலாம்.

மலையேற்றம் பலருக்கு அவர்தம் சந்ததியினரை இயற்கை அல்லது பசுமை விரும்பியாக ஆக்குவதற்கான முயற்சியாக இருக்கலாம்.

ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிப்பிடத்தகுந்த காரணங்கள் உண்டு மலையேற்றத்தை விரும்புவதற்கும் ஈடுபடுவதற்கும். காரணம் எதுவாக இருப்பினும் மலையேற்றத்தில் ஈடுபடுவோர் ஒவ்வொரு முறையும் ஒரு படிப்பினையை கற்று கொள்கின்றனர் என்பதுதான் நான் அறிந்த உண்மை. 

தன்னை உணர்ந்து கொள்வதற்கும் புதுப்பித்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது மலையேற்றம். மலையேற்றத்தின் வாயிலாக அனைத்து நல்ல பழக்கங்களையும் ஒருசேர கற்றுக்கொண்டு தொடரமுடியும். ஆரோக்கியமான கொண்டாட்டத்திற்கு வித்திடும் பொழுதுபோக்குகளில் முதன்மையானது மலையேற்றம்தான் என்பது நான் உணர்ந்த வெளிப்படுத்த விரும்பும் ஒரு செய்தி. 

மலையேற்றம் செய்வதற்கென்றே பிரத்யேகமான இடங்கள் உண்டு. உதாரணமாக இமயமலை, கொடைக்கானல் போன்ற இடங்களை கூறலாம். இது போன்ற புகழ் பெற்ற தொலைவில் உள்ள இடங்களை தேர்வு செய்யும்போது முன் கூட்டியே திட்டமிடுதல் அவசியம். குறிப்பாக மலையேற்றம் செய்வதற்கான பகுதி, நம்மை வழிநடுத்துவதற்கு ஏற்ற ஒரு வழிகாட்டி மற்றும் பயண அட்டவணை போன்றவை முன்கூட்டியே திட்டமிடப்படவேண்டியவை. 

விடுமுறை, உடல்திறன் மற்றும் பொருளாதார நிலையினை மனதில் வைத்து மலையேற்றம் செய்யும் பகுதியை நாம் தேர்ந்தெடுக்கலாம். மலையேற்றத்தில் பெரிய அளவில் நாட்டம் இல்லாதவர்கள் தங்களது பகுதிக்கு அருகில் உள்ள மலைக்கு சென்று மலையேற்றத்தில் ஈடுபட்டு நாட்டத்தை வரவழைக்க முயலலாம். நாம் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் நமக்கு தெரியாமலேயே பல மலையேற்ற பகுதிகள் இருந்ததை என் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தேன். உங்கள் பகுதிக்கு அருகிலும் இதுபோல பல மலையேற்ற பகுதிகள் இருக்கும் தேடிப்பாருங்கள். 

எளிதான பாதையை விட கரடுமுரடான மிக நீண்ட மலையேற்ற பயணத்தை மேற்கொள்ளும்போது நமக்கு அது ஒரு சிறந்த அனுபவத்தை தரும். ஒரு நாள் பயணத்தை விடுத்து நெடுநாள் பயணத்தை விரும்புபவர்கள் தேவையான பொருட்களை தங்களுடன் எடுத்து செல்ல மறக்க கூடாது. 

2013 ஆம் ஆண்டு நந்தா பொறியியல் கல்லூரி தன்னாட்சி தகுதி பெற்று முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்தபொழுது முதுகலை பட்டப்படிப்பில் நானும் ஒரு மாணவனாக அடியெடுத்து வைத்தேன். தன்னாட்சி தகுதி பெற்ற பிறகு பல்வேறு சங்கங்களை தொடங்கி அதில் மாணவர்களை ஈடுபடுத்த தொடங்கியது கல்லூரி நிர்வாகம். இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களை வழிநடத்தும் பொறுப்புடன் நாங்களும் மலையேற்றம் சங்கத்தில் சேர்ந்து செயல்பட தொடங்கினோம். 

முதன்முதலாக சென்னிமலைக்கு மலையேற்றத்துக்காக சென்றோம். சென்னிமலை - இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கைத்தறி தொழிலுக்கும் முருகன் கோவிலுக்கும் பிரசித்தி பெற்றது சென்னிமலை. தனிப்பட்ட முறையில் பல முறை அங்கு ஆலய வழிபாட்டுக்காக சென்று இருந்தாலும் கூட இது ஒரு புது அனுபவமாக எனக்கு இருந்தது. 

உடலுக்கு வேலை கொடுப்பது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது, 
நல்ல காற்றை சுவாசிப்பது, பசுமையை ரசிப்பது என மலையேற்றத்துக்கே உண்டான குணாதியசங்களுடன் சேர்த்து நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் மலையேற்றத்தின் இடையில் கடும் வெயிலும் கடும் மழையும் இரண்டறக்கலந்து எங்கள் கண் நிறைந்தது, மழையில் நனைந்து மனது குளிர்ந்து மலை உச்சியை எட்டியபொழுது முருகப்பெருமானுக்கு செய்து கொண்டிருந்த 12 மணி பூஜையை கூட்டமே இல்லாமல் காணக்கிடைத்தது என மன நிறைவாக அமைந்தது சென்னிமலை மலையேற்றம். இதன் பிறகு நான் பல மலையேற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் இயற்கையுடன் இணைந்து மேற்கொண்ட இந்த சென்னிமலை மலையேற்றம்தான் சிறந்த ஒன்றாக என் மனதில் பதிந்துள்ளது இந்த பதிவினை இடும் வரைக்கும். 

நான் சென்ற மலையேற்றங்களில் எடுத்த புகைப்படங்களை இவ்வலைப்பதிவில் 'மகிழ்வான மலையேற்றம்' என்ற தலைப்பில் உள்ள இடுகைகளில் நீங்கள் காண முடியும். நீங்களும் நேரம் கிடைக்கும்பொழுது மலையேற்றம் போன்ற பயனுள்ள செயல்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை