Friday, May 5, 2017

அச்சச்சோ ! என்னாச்சு ?

தலைப்பை பார்த்து குழம்பாமல் அனைவரும் செய்யும் விளம்பர யுக்திதான் இது என்று நினைக்கும் அனைத்து புத்திசாலி நண்பர்களுக்கும் இனியதொரு வணக்கம் ! சரி நேரிடையாக கருத்தினுள் ---->

கவிதை எழுதுவதில் நாட்டம் ஏற்பட்ட பிறகு என்னளவில் தோன்றக்கூடிய சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை கவிதையாக மாற்றி வந்தேன் (கவிஞர்கள் மன்னிக்கவும் ) ! அந்த கவிதைகளையும் கவிதையை பற்றிய என்னுடைய பார்வையையும் இத்தளத்தில் முன்னரே பதிவிட்டுள்ளேன் ! அதனை பார்ப்பதற்கு கீழ் உள்ள இணைப்பை கொடுக்கவும் ! 


அதன் பிறகு அனைவராலும் அதிகம் போற்றப்படுவதும் இகழப்படுவதுமான காதலை பற்றி ஏதாவது எழுதினால் என்ன என்ற ஒரு யோசனை தோன்றியது ! அப்படி நினைக்கையில் என் சிந்தையில் வந்து போன ஒரு கருவை எடுத்து கொண்டுதான் இந்த கவிதையை எழுதினேன் சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு ! இதனை எழுதுவது ஒன்றும் அவ்வளவு எளிதாக எனக்கு இருந்து விடவில்லை ! அனுபவ அறிவு இதிலில்லா காரணத்தால் கேள்வி ஞானத்தின் உதவியுடன் நேரம் எடுத்தே எழுத முடிந்தது !  காதலில் மூழ்கி திளைத்திருந்தால் ஒரு நொடியில் காவியம் படைத்திருக்கலாமோ என்னவோ ? மூழ்காமல் (காதலில் மூழ்காமல்) மேலே இருந்து பார்த்து மட்டுமே எழுதியதால் என்னமோ இக்கவிதை தனி சிறப்பை பெறுவதாக உணர்கிறேன் ! 

இக்கவிதையின் பொருள் மிகவும் புதியதாக இருக்கும் என்று என்னால் சொல்ல இயலவில்லை என்றாலும் கூட வார்த்தை அமைப்பு ரசிக்கும்படியாக இருக்கும் என்று கூற முடியும் ! மேலும் பல யோசனைகள் காதல் கவிதைகள் எழுதுவதற்காக இருந்தாலும் கூட வேலைப்பளுவின் காரணமாக முடியவில்லை. விரைவில் புது பொலிவுடன் அவைகள் பார்வைக்கு வரும் ! 

உங்களது மேலான கருத்துகள் வரவேற்க படுகின்றன ! 

கவிதையை படிக்கவும் ----->

அச்சச்சோ ! என்னாச்சு ?
உலகம் மகிழ்ந்திருக்க உள்ளுக்குள் அழுகிறேன் 
பெற்றுக்கொண்ட வேதனையால் பாதைமாறி நிற்கிறேன் 
இப்பிணியை குணமாக்க நானெங்கு போவேனோ !
அச்சச்சோ ! புண்ணாச்சா ?
ம்ம்..மனம் புண்ணாச்சு 
காதல்பிரிவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினாள் காதலி !
அச்சச்சோ ! மேல சொல்லு
கடமை விடுவித்து காதல் செய்தேன் 
விடுப்பு எடுத்து நகர்வலம் வந்தேன் 
தடைகளை தாண்டி தவம் இருந்தேன் 
அவளுடன் வாழ அன்புடன் நான் !
உறவுகள் துறந்து அவள் கைதியானேன் 
அர்த்தம் புரியாமல் தர்க்கம் செய்தேன் 
நோக்கம் இல்லாமல் ஏக்கம் வளர்த்தேன் 
என்னவளாக அவளை கற்பனை கொண்டதால் !
நேரத்தை விரயமாக்கி வாரத்தை (ழி)ளித்தேன் 
பகிர்ந்த வார்த்தைகள் சந்தித்த இடங்கள் 
நெகிழ்ந்த தருணங்கள் மறக்காமல் தவித்தேன் 
அவள் (ங்)கம் எங்கும் நிறைந்ததனால் !
'FaceBook'-இல் பேசாத நாளும் இல்லை 
'WhatsApp'-
இல் வாராத நாளும் இல்லை 
துட்டும் கொடுத்தேன் விட்டும் கொடுத்தேன் 
அனைத்தும் நடந்தது அவள்நலம் விரும்பித்தான் !
அச்சச்சோ ! உண்மைக்காதல் போல ...
நம்பிக்கை சுமந்தே நகர்ந்து வந்தேன் 
நாளை நம் நாள் என்று ஒவ்வொரு நாளும் 
ஆனால் இன்று...
நட்புகூட வேண்டாமாம் சொல்லியே விட்டாள்
இனி என்னிடம் பேசமாட்டாள் ஒருநாளும் !
காரணம் காட்டாமலே கண் மறைந்தாள் 
நான் கண்ணீர்விட்டு சொல் மறந்தேன் 
சோகம் தாக்க சோர்ந்து போக 
சொந்தங்கள் சூழ அறிவுரைகள் தயார் எனக்கு !
அச்சச்சோ ! இப்படி பண்ணிட்டாளே பாவி ..
ஊர் அறிய கண்ணீர் விடுவதால்
கோபம் கொண்டு வீரம் காட்டுவதால் 
ஓரமாக முடங்கி மாறாக நடப்பதால் 
விரக்தி அடைந்து வீண்வாதம் செய்வதால் 
நடப்பது ஏதும் நன்மை ஆகுமோ ?
ஆகையால்,
புலம்பலும் போராட்டமும் 
என் 'மன' அறையில் மட்டும்தான் !
சேர்ந்து களித்த பொழுதுகளையும் 
சந்திக்க போகும் தனிமையையும் 
ஒன்றாக்கி நினைக்கும் ஒவ்வொரு நொடியும் 
குறைக்கும் என் ஆயுளின் பல நிமிடங்களை !
அச்சச்சோ ! அப்படினா என்னதான் செய்ய போற..
அப்படிக்கேளு.
கவலை கொள்ள கரிசனம் காட்ட 
பாசம் கூட்ட பகமை போக்க 
இன்பத்தில் திளைக்க வாழ்க்கை வாழ 
பல விடயங்கள் பரவிக் கிடக்கின்றன 
என்னைச் சுற்றிலும் !
ஆகவே,
நாளை முதல் வேறு ஓர் அத்தியாயம் 
எனக்கே உரித்தான உண்மைக் காதலுடன் !

இதே கவிதை பட வடிவமைப்பில் ஐந்து பாகமாக கீழே  கொடுக்க  பட்டுள்ளது ! 

அச்சச்சோ ! என்னாச்சு ? 1

அச்சச்சோ ! என்னாச்சு ? 2

அச்சச்சோ ! என்னாச்சு ? 3

அச்சச்சோ ! என்னாச்சு ? 4

அச்சச்சோ ! என்னாச்சு ? 5

இக்கவிதையின் ஒருங்கிணைந்த பட கோப்பு கீழே ! 



அச்சச்சோ ! என்னாச்சு ?


மேலும் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும் !