Monday, October 10, 2016

நான் பிறந்த ஊரும் சார்ந்த வாழ்வும் - பகுதி 1

நண்பர்களே வணக்கம் ! 

மீண்டும் தமிழில் ஒரு பதிவிட விருப்பத்துடன் இருக்கவே என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது இந்த தலைப்பு ! நான் இங்கு கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் என் நினைவில் நின்றதும் என் செவிக்கு எட்டியதும் கலந்த கலவையே ஆகும் ! 

நான் பிறந்த ஊர்

ஒவ்வொருவருமே அவர்கள் சார்ந்துள்ளது எதுவாகினும் அதில் அதீத உரிமை எடுத்துக்கொள்வது வழக்கம். புரிந்து கொள்ள கூடியதுதான். என் சொந்த வீடு , என் சொந்த ஊரு என்று மார் தட்டி கொள்ளும், கணியன் பூங்குன்றனார் வழி வராத அந்த கும்பலை சேர்ந்தவன்தான் நானும் ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை போல). வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டில்  இல்லையென்றால் வளர்ந்த நகருக்கு நடுவில் நான்கு சென்ட் இடம் வாங்கி குடிபெயரலாம் இல்லையெனில் வேலைக்காகவாது அங்கும் இங்கும் ஒதுங்கலாம் என்றளவில் என் வயது சார்ந்தவர்கள்  மன ஓட்டம் கிளை போல் பரவ நான் மட்டும் ஊர்த்தவளையாக ஊரை விட்டு போக மனமில்லாமல் இங்கேயே நாட்களை கடத்துவதற்க்கான காரணம் உண்மையில் எனக்கு பிடிபட இல்லை.இதனை மடமைத்தனமான விடயமாக மற்றவர்கள் கருதுவதற்கு அத்துனை வாய்ப்புகளும் உண்டு. சரி.இப்பொழுது   உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த தலைப்பில் நான் இங்கு வந்த காரணம்.

கூத்தம்பாளையம், ஈங்கூர், பெருந்துறை, ஈரோடு 

09-10-2016 அன்று  கிளிக்கிய தற்போதைய கூத்தம்பாளையம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய வீடு அம்பு குறியிட்டு காட்டப்பட்டு உள்ளது. 

Koothampalayam, Perundurai, Erode
செயற்கைக்கோள் காட்சி தரும் கூத்தம்பாளையத்தினை கீழ்வரும் படங்களில் காணலாம் ! 

Satellite View - Koothampalayam Erode


Satellite View - Koothampalayam, Erode
இது தொடர்பான வீடியோ பார்க்க கிளிக் செய்யவும் !                                         https://www.youtube.com/watch?v=8Gx3ubKNQRA 

கூத்தம்பாளையம் - என் தாத்தாவின் இளமை பருவ காலத்தில் நூறு அல்லது நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விவசாயம் செய்யப்பட்ட , இப்பொழுது முப்பதுக்கும் குறைவான குடும்பங்களுடன் தனது விவசாய நிலத்தை இழந்து நிற்கும் ஒரு கிராமம். ஈங்கூர் பஞ்சாயத்தின் கீழ்வரும் பதினெட்டு கிராமங்களில் ஒன்றுதான் எனது ஊர்.

தெரிந்துகொள்வதற்காக பதினெட்டு ஊர்களையும் வரிசைப்படுத்துகிறேன் !

1. ஈங்கூர்
2. பாலப்பாளையம்
3. புலவனூர்
4. காசிபில்லாம்பாளையம்
5. குட்டப்பாளையம்
6. வெட்டுக்காட்டுவலசு
7. நல்லிகவுண்டன்பாளையம்
8. எழுதிங்கள்பட்டி
9. செங்குளம்
10. கூத்தம்பாளையம்
11. நல்லிவலசு 
12. கவுண்டனூர் 
13. நல்லமுத்தாம்பாளையம்
14. சரவம்பதிபுதூர்
15. சரவம்பதி 
16. உச்சனகவுண்டன்புதூர்
17. வேலாயுதம்பாளையம் 
18. பாளிக்காட்டூர் 

கூத்தம்பாளையம் என்பது ஒரு கிராமமாகவும் அதனுடன் இணைந்து பல பேர்களில் தோட்டங்களும் காடுகளும் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன. 

பின்வரும் காடுகள் தண்ணீர் பாய்ந்து பல பயிர்களுக்கும் மரங்களுக்கும் உயிர் தந்த வேளாண்மை நிலங்களாக அறியப்படுகின்றன. இக்காடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு கிணறு ஒன்று இருந்துள்ளது. முதலில் எருதுகளையும் காளைகளையும் கொண்டு நீர் இறைத்தும் , பின்பு மோட்டார் வைத்து நீர் இறைத்தும் விவசாயம் செய்யப்பட்டுள்ளன.

நத்தக்காடு
குட்டையக்காடு
சுள்ளிக்காடு
அத்திக்காடு
பள்ளக்காடு
சக்கிளியங்காடு
கருப்பணாங்காடு
படசுழிக்காடு
பெரியதோட்டம்
பிஞ்சத்தோட்டம்
சேவுங்காடு
வயக்காடு
வேலாங்காடு
பங்குனியங்காடு

இவை அல்லாமல் மழை நீரை மட்டும் நம்பி, வானம் பார்த்த பூமியாகவும் சில காடுகள் இருந்துள்ளன. இவைகளை 'வரக்காடு' என்றும் 'பாங்காடு' என்றும் மக்கள் கூறுகின்றனர். இந்த காடுகளை கால்நடைகளை மேய்ப்பதற்காக பயன்படுத்திக்கொண்டனர். மழைக்காலங்களில் இந்த வரக்காடுகள் வரம் தரும் காடுகளாக மாறி, கால்நடைகளுக்கு தீவனமாக அமையும் சோளத்தட்டுகளை விதைத்து அறுவடை செய்வதற்கு அம்சமாக அமைந்தன. இக்காடுகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது !

சன்னக்காடு
தோட்டக்காடு
செங்களையாங்காடு
வேப்பனாங்காடு
எழந்தக்காடு
கோம்பக்காடு
களிம்பிக்காடு
புளியங்காடு
மணியங்காடு
கும்மக்குளிக்காடு

வேளாண்மைக்கு பெயர் போன வெள்ளாள கவுண்டர்கள் தான் இந்த கொங்கு நாட்டில் அதிகம். அதுபோல இங்கும் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியை சேர்ந்த ஓதாளன் கூட்டம், தோடை  கூட்டம், ஈஞ்சன் கூட்டம் சார்ந்த மக்கள்தான் பெருவாரியாக வசித்து வருகிறார்கள் ! அது தவிர மற்ற சாதியினரும் விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்தும் சமூக நல்லிணக்கம் சுமூகமாக இருப்பதில் பிரச்சனை எதுவும் இல்லை ! 

சிப்காட்டின் வரவும் குடும்பங்களின் குறைவும்  

நூற்றுக்கும்  மேற்பட்ட குடும்பங்களுடனும் பசுமையான தோட்டங்களுடனும் காட்சி தந்த கூத்தம்பாளையம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் வந்த பிறகு அதன் அழகை இழக்கத் தொடங்கியது. எனக்கு நினைவு தெரிந்த பொழுதுதான் சிப்காட் பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி இருந்தார்கள். சில தொழில் நிறுவனங்களும் வர ஆரம்பித்திருந்தன. அதன் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது சிப்காட் எடுத்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் எங்கள் ஊர்காரர்களின் நிலங்களும் அடக்கம் என்று. எங்களுடைய முன்னோர்கள் பணம் என்ற முதலைக்கு தங்களுடைய விவசாய நிலங்களையும், காடுகளையும்   பலியாக கொடுத்து விட்டார்கள். அன்றே அழிவு மறைமுகமாக தொடங்கி இருந்தது எங்கள் ஊருக்கு. தோட்டங்களின் உரிமையாளர்கள் அப்பொழுதே இடம் பெயர்ந்து விட்டனர். ஊர்ப்பகுதி மக்கள் மட்டும் காடுகளை விற்று வந்த பணத்தை வைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். 


SIPCOT Entrance, Perundurai, Erode
SIPCOT Entrance, Perundurai, Erode
காலம் செல்ல செல்ல சிப்காட் பகுதியில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. சில நிறுவனங்கள் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்தில் குழி தோண்டி விட பழகி இருந்தன. ஆகையால், குடிதண்ணீர் கிடைப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனோடு சேர்ந்து நிறுவனங்கள் வெளியிடும் நச்சுப்புகையும் அதீத மாசினை உண்டாக்கின. இவைகளால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். 

ஊரை மட்டும் விட்டு விட்டு சுற்றியுள்ள அனைத்து நிலங்களையும் எடுத்துக்கொண்டது சிப்காட். இத்தகைய வரலாற்றை கொண்ட கூத்தம்பாளையத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா ? ஊரை சுற்றியுள்ள சிப்காட் இடத்தில் நிறுவனங்கள் கட்டிடம் கட்டுவதற்க்கான ஆயுத்தப்பணிகளை ஆரம்பித்துவிட்டன. 

Lands Under Cleaning - Koothampalayam, Erode


Lands Under Cleaning - Koothampalayam, Erode


 Cleaned Land in Koothampalayam, Erode

நிறுவனங்களின் வருகையால் நாலா புறமும் அடைக்கப்பட்டு சிறைபட  போகிறது எனது கிராமம் ! இது, மக்கள் வேறு இடம் தேடி குடி அமர்வதற்கான சூழலை உண்டாக்கி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் ! 

நீரின்றி அமைந்த ஊர் 

குடிதண்ணீரை பொறுத்தவரை அவ்வளவு எளிதாக பெற முடிவதாக எப்பொழுதும்  இருந்ததில்லை. எனக்கு நினைவு தெரிந்த பொழுது ஒரே ஒரு கைப்பம்பு மட்டும்தான் தண்ணீருக்கு மூலாதாரமாக விளங்கியது. 

Water Source
கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த களைப்பில் கைபம்பை வேகமாக பல முறை அமுத்திவிட்டு சட்டென்று ஓடி சென்று இரு கையையும் ஒரு சேர கூப்பி தாகம் தணித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. 

அதன் பின், ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் பெற்று வந்த கிராமம் பிரச்சனையை சந்திக்காமல் இல்லை. அவ்வப்போது மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் பெறுவதில் சிரமம் ஏற்படத்தான் செய்தது. அப்பொழுது எல்லாம் மக்களின் வாய்களுக்கு தீனியாக அமைவது பஞ்சாயத்து தலைவர்தான். சும்மா பொரிந்து தள்ளிடுவார்கள்.


Water Source
அதே சமயம்  கிணற்று தண்ணீர் மக்களின் தாகத்தை தீர்த்து நல்ல பெயர் வாங்கி கொண்டது. ஒரு சில சமயங்களில் கூத்தம்பாளையம் சார்ந்த தோட்டங்களின் உரிமையாளர்களிடம் பேசி தோட்டத்து கிணற்றின் தண்ணீரை குழாய் அமைத்து பெற்றனர்.


Water Source - Well
ஏதாவது ஒருவகையில் தண்ணீர் பிரச்சனையை சமாளித்து வந்த கிராமம் சிப்காட்  தொழில் வளர்ச்சி மையம் வந்த பிறகு தண்ணீருக்கான ஆதாரத்தை முற்றிலுமாக இழந்தது. ஆழ்துளை கிணற்றிலோ சிகப்பு கலராகவும் , பச்சை கலராகவும் தண்ணீர் வர ஆரம்பித்தன. எனவே , கிணற்று நீரையே முற்றிலும் நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். கிணற்று நீரும் கொஞ்ச நாள் கழித்து மாசு பட ஆரம்பித்தன. நிறம் மாற ஆரம்பித்தன. இருந்தாலும் நத்தக்காட்டு பகுதியில் அமைந்த மிக ஆழம் கொண்ட ஒரே ஒரு பழைய கிணறு மட்டும் ஓரளவு சுத்தமாக இருந்தது. குடிப்பதற்கு பயன்படாவிட்டாலும் கூட குறிப்பிடும் காலம் வரை மக்களின் முக்கால்வாசி தேவைகளை தீர்த்து வைத்த  பெருமை இதற்கு உண்டு. குடிதண்ணீரை ஈங்கூர் பகுதிக்கு சென்று மக்கள் எடுத்து வந்தனர். சில பேர் அதற்கும் நேரம் இல்லாமல் கிணற்று தண்ணீரையே பருகினர். 

சில காலம் கழித்து இதற்கு விடிவு காலம் பொறந்தது. காவேரி தண்ணீரை குழாய்கள் அமைத்து பெற முயற்சி எடுக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. ஊரில் ஒரு தண்ணீர் தொட்டி அமைத்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. இதிலும், தண்ணீர் சரியாக வரவில்லை முதலிய நடைமுறை  பிரச்சனைகள் அதிகம் துளிர்விட்டு முளைக்கவே ஊருக்கு பொதுவாக ஒரே ஒரு குழாய் மட்டும் அமைக்கப்பட்டு தண்ணீர் தரப்பட்டது.  

தற்சமயம், இதில்தான் தண்ணீர் பெறுகிறோம். இதுவும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வருவதாலும் , வீட்டிற்கும் தண்ணீர் பிடிக்கும் இடத்திற்கும் இடையில் தூரம் சற்றே அதிகம் என்பதாலும் தண்ணீர் பெறுதல் ஒரு சவாலான காரியமாகவே உள்ளது இன்று வரைக்கும் !


Cauvery Water Pipe Koothampalayam, Erode
தண்ணீர் எடுத்துவிட்டு வந்துதான் இந்த பதிவையே இடுகிறேன் என்றால் பார்த்துக்குங்க (பாத்திரம் கழுவ மட்டும் தண்ணி இல்லைனு வைங்க, என்னை சும்மா கழுவி கழுவி ஊத்தும் - மை டியர் அம்மா ! தண்ணிக்கு அவ்ளோ கிராக்கிங்க). 

---------> அடுத்த பதிவில் தொடரும் 

இன்னும் விட்டுப்போன செய்திகளையும் கிராமத்தின் பழக்க வழக்கங்கள் பற்றியும் என் சிறு வயது நிகழ்வுகள் பற்றியும் அடுத்த பதிவில் விவரமாக தருகிறேன்  ! 

என்னை முகநூலில்  பின்தொடரலாம் ! 

Sunday, October 9, 2016

EARTH TO HOME ( SATELLITE VIEW )

Hiii All !

This YouTube Video Shows Satellite Views from Earth to My Home (Step by Step Manner) ! Because of Grouping the Images for Making Video, It does not Display the Content with Actual Resolution ! Hence, the Area Names are not Clear in this Video ! 

Just a Different Attempt ! Enjoy !


Connect Me @ Facebook ! 

Sunday, October 2, 2016

@ SHOLUR IN OOTY ON 01-10-2016

On 01-10-2016, I have Gone for Trekking Along with My Students to SHOLUR Area that is in OOTY TAMILNADU INDIA. For Trekking, I already went to Different Places Where I didn't Experience the Proper Trekking ! But, Ooty Changed the History and Gave me Real Trekking Experience ! The Guide who was Guiding us All the Time Provided Lot of Useful Information and Showed Us the Monkey Shape Rock and First-built Ancient House in Ooty and lot ! Thanks to Him ! Though I could not Take much Photos Since My Phone Lost its Power, I am now able to Give Few Graceful Snaps ! Enjoy Friends ! 

































Connect me @ Facebook ! Feel Free to Post Your Feedback ! 

Monday, May 9, 2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 - கணிப்பும் கருத்தும்


நண்பர்களே வணக்கம் !

நான் முதலில் வலைப்பதிவை உருவாக்க தொடங்கிய பொழுது ஆங்கில மொழியில் மட்டும்தான் எனது பதிவுகள் இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். அப்பொழுதுதான் அது பெருவாரியான மக்களை சென்றடையும் என்பதுதான் எனது நிலைப்பாட்டிற்கு காரணமாக அமைந்தது. பின் என் தொழிலில் முழுநேரமாக ஈடுபட ஆரம்பித்ததால் எனது கருத்துகள் முழுவதையும் ஆங்கிலத்தில் சொல்வது அவ்வளவு எளிதாக அமையவில்லை( தாய்மொழி தமிழ் என்பதனால்). ஆதலால் இனிமேல் எனது பதிவுகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். ஒரு பகுதி அல்லது ஒரு சாரரை மட்டும் சென்று சேர வேண்டிய கருத்துகளை தமிழிலும், அனைத்து மொழி தரப்பினரையும் சென்றடைய வேண்டிய கருத்துகளை ஆங்கிலத்திலும் தரலாம் என முடிவெடுத்துள்ளேன். நான் இந்த முடிவை எடுப்பதற்கு பின்னால் "கூகிள் மொழிபெயர்ப்பு" தேர்வு முறையை எனது வலைப்பதிவில் இணைத்து உள்ளதும் ஒரு மூல கூறாக உள்ளது என்றால் அது மிகையே அல்ல. 

சரி . இனி தலைப்பினுக்குள் செல்லலாம்.

நான் இந்நேரம் இப்பதிவினை எழுதி கொண்டிருக்கும் பொது தமிழ்நாட்டில் அநேகமான இடங்களில் தேர்தல் பிரச்சாரம் அதன் உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் என்பது நிதர்சனம். பிரச்சாரத்தையும் தாண்டி பண விநியோகம் என்பதும் சத்தமே இல்லாமல் ஓரிரு இடங்களில் நடக்கலாம் என்பது எனது யூகம். போன தேர்தல்களில் நடந்த அளவிற்கு பண விநியோகம் 2016 சட்ட மன்ற தேர்தல்களில் இல்லை என்பதற்கு முழு முதற் காரணம் தேர்தல் ஆணையம் தான் என்பதை விருப்பு வெறுப்புகளை தாண்டி நாம் பாராட்டத்தான் வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் வேலையை சுலபம் ஆக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. காசுக்காக எனது ஓட்டை விற்க மாட்டேன் என்ற உறுதியை ஏற்பதன் மூலமாகத்தான் அது சாத்தியப்படும். 


TAMILNADU ASSEMBLY ELECTION 2016
2016 சட்ட மன்ற தேர்தலை பொறுத்த வரை பின்வரும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

1. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 
2. திராவிட முன்னேற்ற கழகம்
3. தேசிய முற்போக்கு திராவிட கழகம் 
4. பகுஜன் சமாஜ் கட்சி 
5. காங்கிரஸ் கட்சி 
6. பாரதிய ஜனதா கட்சி 
7. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

இவைகள் மட்டும் அல்லாமல் பின்வரும் கட்சிகளும் இத்தேர்தலில் அழுத்தத்தை கொடுக்கின்றன. 

--> மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 
--> பாட்டாளி மக்கள் கட்சி
--> தமிழ் மாநில காங்கிரஸ் 
--> நாம் தமிழர் கட்சி 
--> விடுதலை சிறுத்தைகள் கட்சி 
--> கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 
--> புதிய தமிழகம் கட்சி 
--> மனிதநேய மக்கள் கட்சி 
--> சமத்துவ மக்கள் கட்சி 
--> கொங்கு இளைஞர் பேரவை 

இவை தவிர சில சில முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த கட்சிகளும் குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சிகளும் போட்டி இடுகின்றன. 

இதுவரை 

ஒவ்வொரு கட்சியை பற்றி பார்பதற்கு முன்னால் இதவரை நடந்த தேர்தல்களின் முக்கியமான அம்சங்கள்.

--> சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் , நீதி கட்சி பலமுறையும் ஆட்சி அமைத்துள்ளது. 

--> சுதந்திரத்திற்கு பின், 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதில் புகழ் பெற்ற முதல் அமைச்சராக காமராஜ் விளங்கினார். இப்பொழுது வரை அனைத்து கட்சியினராலும் சிறந்த முதல் அமைச்சராக போற்ற படுபவர்.

--> பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  திராவிடர்  கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய அண்ணா  1967 இல் ஆட்சியை பிடித்தார். 

--> அண்ணாவின் மறைவிற்கு பின் கலைஞர் கருணாநிதி அவர்கள் திமுக சார்பில் போட்டியிட்டு ஐந்து முறை முதல் அமைச்சர் ஆகி உள்ளார். 

--> திமுக வில் முக்கிய சக்தியாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் கருணாநிதி உடன் ஏற்பட்ட மோதலால்  அண்ணா திமுக வை தொடங்கினார். அதன் பின் தொடர்ச்சியாக மூன்று முறை முதல் அமைச்சர் ஆனார் என்பது வரலாறு. அவரது புகழ் இன்றும் மக்கள் இடத்தில் இருப்பது தான் மாபெரும் மகத்துவம். 

--> எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவிற்கு பின் கட்சியில் பொறுப்பேற்ற ஜெயலலிதா இதுவரை மூன்று முறை முதல் அமைச்சர் ஆகி உள்ளார். 

--> 1989 க்கு பிறகு அதிமுக மற்றும் திமுக கட்சிகள்தான் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்து உள்ளன. 

--> இரு கட்சிகளுமே வலுவான கூட்டணி அமைத்துத்தான் இதுவரை வெற்றியை ருசித்துள்ளன. 

--> 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 39 இல்  37 இடங்களை கைப்பற்றியது

அதிமுக 

இந்த முறை அதிமுக மிகவும் துணிச்சலாக "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற முழக்கத்தை முன்வைத்து தனியாக போட்டி இடுகிறது. 234 தொகுதிகளிலும் இரட்டை இலையே போட்டி இடுவது சிறப்பு. 

2014 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி அதிமுக விற்கு உற்சாகத்தை கொடுத்தாலும் 2015 இன் இறுதியில் சென்னையில் வந்த மழை வெள்ளம் ஒரு மிக பெரிய அதிருப்தியை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. 

கட்சியின் தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்த பிறகு மந்தமாக இருந்த கட்சி அவரது அனல் பறக்கும் பிரச்சாரத்தால் சுறுசுறுப்படைந்துள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு செய்த நலத் திட்டங்களும் 2016 க்கான தேர்தல் அறிக்கையும் இம்முறை வெற்றியை தேடி தரும் என்று அதிமுக நம்புகிறது.

மற்ற கட்சிகளை காட்டிலும் ,பெண்களுக்கும் புது முகங்களுக்கும் அதிமுக வில் அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக 

மிக பழமையான வரலாறு கொண்ட திமுக ஒவ்வொரு முறையும் வலுவான கூட்டணி அமைத்தே ஆட்சி அமைத்துள்ளது. இம்முறை அப்படி ஒரு கூட்டணி அமைய வில்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது திமுக விற்கு மிக பெரிய பலமாக அமையா விட்டாலும் திமுக வின் வருங்கால தலைவராக போற்றப்படும் ஸ்டாலின் "நமக்கு நாமே" பயணத்தை மேற்கொண்டது பலமாக அமையும் என்பது கட்சியினரின் கணிப்பு. 

திமுக வின் தீவிரமான பிரசாரமும் வலுவான வேட்பாளர்களை தொகுதியில் களம் இறக்கி இருப்பதும் கண்டிப்பாக ஆளும் கட்சிக்கு தலைவலியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. 

மக்கள் நலக் கூட்டணி 

பல ஆண்டுகளுக்கு பிறகு ஓரளவு வலுவான மூன்றாவது அணி அமைந்து உள்ளது. இதை அமைத்ததற்கான முழு பெருமையும்  வைகோ அவர்களையே சாரும். இதற்காகவே அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்ளலாம். 

இந்த கூட்டணியில் விஜயகாந்த், திருமாவளவன், வாசன் மற்றும் இடதுசாரி தோழர்களும் இணைந்து உள்ளனர். முதலில் எதிர்பார்ப்பை உருவாக்கிய இக்கூட்டணி விஜயகாந்தை முதல்  அமைச்சர் வேட்பாளராக்கி பிரசாரத்தை தொடங்கியவுடன் நம்பிக்கையை இழக்க தொடங்கியது.

பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகும் விஜயகாந்த் தனது வழக்கமான பாணியையே பின் தொடர்வது மக்களிடத்தில் ஒரு சிறு சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு கட்சியும் அரசியல் அங்கீகாரம் பெறுவதற்கு வேண்டுமானால் இக்கூட்டணி பயன்படலாமே தவிர ஆட்சியை  பிடிப்பதற்கு நிறையவே போராட வேண்டும். 

பாஜக 

தேசிய கட்சியான பாஜக கூட்டணி அமையாததால் தனித்து விடப்பட்டுள்ளது. மோடி அவர்களுடைய ஈர்ப்பும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் ஆதரவும் குறைந்தபட்சம் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற சில தொகுதிகளிலாவது வெற்றியை தேடி தரும் என நம்புகிறது பாஜக. 

பெரும்பான்மையான இளைஞர்களின் ஆதரவும் புதிய வாக்காளர்களும் பாஜக விற்கு பலம் என அறியப்படுகிறது. 

பாமக  

"மாற்றம் முன்னேற்றம்" என்ற முழக்கத்துடனும் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தான் என்றும் கூறிக்கொண்டு தேர்தலில் பயணப்படுகிறது பாமக. 

சரியான திட்டத்துடன் நகர்வதும், சிறந்த அறிக்கைகளும் பாமக  விற்கு பலமாக நிற்கின்றன. வன்னியர் அடையாளமாக இக்கட்சி திகழ்வது ஒரு கரும்புள்ளி என்றாலும் கூட வன்னியர் வசிக்க கூடிய பகுதிகளில் அதுவே ஆதரவாக அமைகிறது. இருந்தாலும் இவை ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை. 

நாம் தமிழர் கட்சி 

புரட்சி கர வசனங்களை பேசியும் தமிழ் இன அரசியலை முன்னிறுத்தியும் தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் எனவும் முழங்கும் சீமான் இத்தேர்தலில் கணிசமான ஓட்டுகளை வாங்குவார். 

மாற்றத்தை விரும்பும் மக்கள், ஜாதி மத அரசியலை கடந்து தமிழ் என்ற புள்ளியில் ஒன்று இணைபவர்கள் சீமானை ஆதரிப்பார்கள்.  

நோட்டவிற்கு ஓட்டளிக்க முடிவு எடுத்து உள்ளவர்களுக்கு எனது ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்று சொன்னால் நோட்டா கண்டிப்பாக நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது. அதற்கு பேசாமல் சீமான் போன்றவர்களுக்கு யோசிக்காமல் வாக்கு அளிக்கலாம். அவர் தேர்தலில் நிலை பெறுவதற்கு இத்தேர்தல் ஒரு அடித்தளமாக அமையும். 

வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள் 

--> கட்சிகளின் நிலையான வாக்கு  வங்கி 
--> முதல்வர் வேட்பாளரின் செல்வாக்கு 
--> உள்ளூர் வேட்பாளரின் செயல்பாடு 
--> வலுவான கூட்டணி அமைத்தல் 
--> தேர்தல் அறிக்கையும் அதன் நம்பகத்தன்மையும் 
--> இறுதி நேர பிரசாரம் 
--> ஊடகங்களையும் சமூக வலைதலங்களையும் கையாளும் விதம் 

தவிர்க்க பட வேண்டியவை 

---> பண பட்டுவாடா 
---> கூட்டத்தை கூடி தனது பலத்தை நிரூபிக்க முயற்சிப்பது.
---> ஜாதியை மையபடுத்தி அரசியல் கட்சி நடத்துவது 
---> பொய் வாக்குறுதிகள் தருவது 
---> தேவைக்கு அதிகமாக இலவசங்கள் தருவது 
---> வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது 
---> கோஷ்டி பூசல் 
---> நம்பக தன்மை இல்லாத கருத்து கணிப்புகள் 
---> தனி நபர் விமர்சனம் 
---> உயிர் இழப்புகள் ( கூட்ட நெரிசலில்) 
---> கொள்கையே இல்லாத கூட்டணி 
---> அதிகார குவியல் 

எது எவ்வாறாயினும் மே 19 அன்று முடிவு தெரிந்து விடும். 
ஆளும் கட்சியா ? 
ஆண்ட கட்சியா ? இல்லை 
ஆட்சிக்கு புதிய கட்சியா என்று 

இதனை தீர்மானிக்க மே 16 அன்று நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம். 

May 16, 2016 -  Election Date
இறுதியாக ஒன்று கூறி முடிக்கிறேன் 

"ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை"

Connect Me @ FACEBOOK ! 

Sunday, January 17, 2016

MyTube Channel

YouTube does not need any introduction ! As we all know, It's a video sharing center where we can share video clips, TV clips, music videos, gaming videos & we can do video blogging ! 


Our day to day life has been associated with youtube channel either by watching or uploading ! Hence, I decided to make a new post about my youtube channel ! So, Its all about my youtube channel ! 

To explore my part to the world, i own my channel in youtube that involves edited videos of mine and recorded videos by my mobile ! First I uploaded  videos to just make my video live on youtube ! Then I started uploading videos after adding necessary features to it in order to achieving perfection in visual appearances ! I strongly believe that I can upload better videos in future as i got enough experience in past !  

Subscribe my channel for interesting videos that you have never seen before !

MyTube Channel




If you have some new content in the form of visuals, YouTube is the best medium to share it to the world ! since YouTube lovers have been increasing every day, it is so easy to impress more number of viewers if your content is truly new to them ! And it is advisable that to prefer trendy topics to upload to get everyone's attention ! 

Don't worry if you are new to the YouTube world ! Just upload a sample video in YouTube by using your existing account of Gmail. Then It will let you know more options ! Once your video is uploaded successfully, you can look over all the options available in YouTube to know more details to set your YouTube channel in complete conditions !

YouTube gives you the following options to manage your channel !
i) YouTube settings
ii) Creator studio









 There is lot to learn about YouTube channel ! It will take enough time to understand all those options given by YouTube channel !

You can also link YouTube account with other accounts ! Moreover, You can earn revenue after applying for AdSense to your channel ! So, make sure that you have YouTube account ! If you don't have, just go and make it !

MyTube Channel


Start uploading and enjoy !